களியக்காவிளை அருகே கேட்டரிங் தொழிலாளி மர்மசாவு போலீசார் விசாரணை

2 months ago 10

மார்த்தாண்டம், நவ.10: களியக்காவிளை அருகே ராமவர்மன் சிறை உண்ணிமான்கரை பகுதியை சேர்ந்தவர் சிபுகுமார் (50). கேட்டரிங் தொழிலாளி. அவரது மனைவி சாந்தகுமாரி (43). இருதினங்களுக்கு முன் சிபுகுமார் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது சிபுகுமாரின் தாயார் குளித்துவிட்டு வீட்டுக்குள் வருமாறு கூறினாரம். இதனால் சிபுகுமார் குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் மறுநாள் காலை அந்த பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டு சுவற்றில் சாய்ந்த நிலையில் சிபுகுமார் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பளுகல் போலீசார் சிபுகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாந்தகுமாரி பளுகல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிபுகுமார் எப்படி இறந்தார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post களியக்காவிளை அருகே கேட்டரிங் தொழிலாளி மர்மசாவு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article