களக்காடு அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கிய தொழிலாளி கைது

3 months ago 19

 

களக்காடு, அக்.16: களக்காடு அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் துரைமணி (47). இவர் அப்பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் கோவிலம்மாள்புரத்தைச் சேர்ந்த ஆத்தியப்பன் மகன் கண்ணன் (25) என்பவர் கடந்த 3 மாதமாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் கண்ணனை துரைமணி வேலையில் இருந்து நீக்கிவிட்டார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் துரைமணி இந்திராநகரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கண்ணன், துரைமணியை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தனர்.

The post களக்காடு அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Read Entire Article