கல்வி, வேலைக்காக சென்னை வரும் புதுச்சேரி பெண்களுக்கு 2 விடுதிகள்: அமைச்சர் தேனீ ஜெயக்குமார்

3 days ago 4

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து சென்னைக்கு சென்று படிக்கும் மாணவிகளுக்கும், பணிபுரியும் மகளிருக்கும் இரண்டு புதிய விடுதிகளை புதுச்சேரி அரசு துவங்கவுள்ளது. இதற்காக ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசுகையில், “மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான நியமன விதிகள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் திருத்தப்பட்டன. மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு உதவியாளர் பதவியிலிருந்து மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 75:25 என்ற விகிதத்தில் 13 பேருக்கு முதன்முதலாக தரப்பட்டது. தற்போது மார்ச் மாதம் வரை 122 மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக உள்ளன. நிர்வாக ஒப்புதல் பெற்ற பிறகு 25 சதவீத அடிப்படையில் 31 மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு உதவியாளர்களுக்கு பதவி உயர்வு தரப்படும்.

Read Entire Article