கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்து ஐ.டி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகள் வழக்கு

1 hour ago 2

சென்னை: தங்களது கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை தி.நகர் ஸ்ரீ லட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலரான திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகள் ஜெ.ஸ்ரீனிஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “மருத்துவம், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கல்லூரிகளைத் தொடங்கி மாணவர்களுக்கு உயர் கல்வி அளிக்கும் நோக்கில் ஸ்ரீ லட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை கடந்த 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பிறகு அறக்கட்டளை சார்பில் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

Read Entire Article