கல்லூரி மீது புகார் அளித்த மாணவியை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

2 months ago 10

சென்னை: கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்ததாக புகார் அளித்த மாணவியை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்குமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் கல்வி கட்டணம் மூலம் ரூ.15 கோடி வரை மாணவர்களிடம் முறைகேடாக வசூலித்ததாக குருநானக் கல்லூரி மீது மாணவி லோகேஸ்வரி புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி லோகேஸ்வரி புகார் அளித்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் செமஸ்டர் தேர்வை எழுத மாணவியை அனுமதிக்குமாறு குருநானக் கல்லூரிக்கு உத்தரவிட்டுள்ளது.

The post கல்லூரி மீது புகார் அளித்த மாணவியை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article