சிவகங்கை: கல்குவாரியில் பாறைகள் சரிந்து படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே, மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. இங்கு கடந்த 20ம் தேதி காலை 18 தொழிலாளர்கள் பாறையில் துளையிடும் பணியில் ஈடுட்டிருந்தனர். அப்போது குவாரியின் மேற்பகுதியில் இருந்து ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 பேர் பாறைகளின் அடியில் சிக்கிக் கொண்டனர்.
இதில், கணேஷ் (45), அர்ஜித் (28), ஆண்டிச்சாமி (52), ஆறுமுகம் (50), முருகானந்தம் (52) ஆகிய 5 பேர் இறந்தனர். மைக்கேல் (42) என்பவர் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மைக்கேல் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து பாறை சரிந்து பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
The post கல்குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு appeared first on Dinakaran.