ஊட்டி: ஊட்டியில் நடந்த அரசு விழாவில் நீலகிரி மாவட்டத்துக்கு ஆறு புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நீலகிரியின் வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சி’ என்று சொல்கின்ற அளவுக்கு இந்த மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம். உதகை ஏரி புதுப்பிப்பு, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாளிகை, இலவச இளம் படுகர் நலச்சங்கக் கட்டடம், முதுமலை சரணாலயம் விரிவாக்கம், இலங்கையில் இருந்து திரும்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை கூடலூர், பந்தலூர், கோத்தகிரி வட்டங்களில் குடியமர்த்தி, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்த தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் உருவாக்கப்பட்டது.