விருதுநகர், டிச.10: விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.02 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர மோட்டார் வாகனத்தை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், டிஆர்ஓ ராஜேந்திரன், தனித்துறை ஆட்சியர் காளிமுத்து உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.