கறம்பக்குடி,டிச.10: கறம்பக்குடி அருகே விவசாயி வீட்டிற்குள் புகுந்த விஷப் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சின்னான் கோன் விடுதி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. விவசாயி. இவரது வீட்டிற்குள் விஷப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் சிறைசீலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் பதுங்கி இருந்த விஷப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அதை வனப்பகுதிக்குள் விட்டனர்.
The post கறம்பக்குடி அருகே வீட்டிற்குள் புகுந்த விஷப் பாம்பு appeared first on Dinakaran.