கர்மவீரரின் சாதனைகளை போற்றி வணங்குவோம் - அன்புமணி புகழாரம்

6 hours ago 3

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் தலைநிமிரச் செய்த தலைமகன் என்றால் அவர் கர்மவீரர் காமராசர் தான். அந்தப் பெருமகனாரின் 123-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக நம்மால் என்ன செய்ய முடியுமோ, அதை விட அதிகமாக செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும் உன்னத நாள் தான் இந்த நாளாகும்.

தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி, தொழில் புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர். அறிவுப்பசியை அணைக்க வயிற்றுப்பசி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்த மகான் அவர். இன்றைக்கு இருப்பதைப் போல சொல்லி விட்டு செய்யாமல் இருந்த தலைவர் அல்ல அவர், ஏராளமானத் திட்டங்களை செயல்படுத்தி விட்டு, அதை செய்ய வேண்டியது எனது கடமை என்று கூறி விளம்பரம் தேடாமல் இருந்த பெருமகன் அவர்.

அவர் எத்தகைய ஆட்சியைக் கொடுத்தாரோ, அத்தகைய ஆட்சி தமிழ்நாட்டுக்கு மீண்டும் கிடைக்கும் என்றால் அது தான் உண்மையான பொற்காலமாக இருக்கும். அதை ஏற்படுத்துவதற்காக உழைக்க நாம் அனைவரும் அப்பெருமகனின் பிறந்தநாளில் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article