பெங்களூரு: கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவில் ரூ.75 கோடி போதை பொருள் கடத்திய 2 தென்னாப்பிரிக்க பெண்களை பெங்களூரு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வரும் வெளிநாட்டுப் பெண்கள் போதைப்பொருள் கொண்டு வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பெங்களூரு சிசிபி போலீசார் உஷாராகினர். அதன்படி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு தென்னாப்பிரிக்க பெண்களை மங்களூர் சிசிபி போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ரூ.75 கோடி மதிப்புள்ள 37.87 கிலோ எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டிக்கு அருகிலுள்ள நீலாத்ரி நகரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கர்நாடகா மாநிலத்தில் இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட இரண்டு தென்னாப்பிரிக்க பெண்களுக்கும், பெங்களூருவில் இருக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவில் ரூ.75 கோடி போதைப் பொருள் கடத்தல்: 2 தென்னாப்பிரிக்க பெண்கள் கைது appeared first on Dinakaran.