கருர், ஜூன் 7: தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, கருர் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, கருர் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம், வெண்ணைய்மலை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ஜூன் 9ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வெற்றிகரமாக பயிற்சியை முடித்து இதுநாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் தங்களது கல்வி, சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ 2, ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் பழகுநர் சான்றிதழ்கள் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநர்களாக சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. தொழிற் பழகுநர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற் பழகுநர்களின் வெட்புலத்தினை நிறைவு செய்திடும் வகையில் உரிய நிறுவன பதாதைகளுடன் இந்த முகாமில் நேரிடையாக பங்கேற்று தொழில் பழகுநர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.
மேலும், விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், 2ம் தளம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகம், வெண்ணைய்மலை (04324&299422). இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கரூர் வேலைவாய்ப்புத்துறை சார்பில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.