கரூர், பிப்.10: கரூர் பேரூந்து நிலையம் எதிரே சிறிய அளவிலான தடுப்பு கட்டையை பொதுமக்கள் எளிதில் தாண்டிச் செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கரூர் தெற்கு பிரதட்சணம் சாலை எதிரே மாநகர பேரூந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தெற்கு பிரதட்சணம் சாலை திண்ணப்பா கார்னர் வரை செல்கிறது. ஒரு புறம் பேரூந்து நிலையத்துக்கான நுழைவு வாயில், எதிர்ப்புறம் உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள் அதிகளவு கொண்ட பகுதியாக உள்ளன.
இந்த பிரதான சாலையின் நடுவில் சிறிய அளவிலான தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், தெற்கு பிரதட்சணம் சாலையின் எதிரே வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள், தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, முறைப்படி, அருகில் உள்ள ரவுண்டானா வழியாக பேரூந்து நிலையத்துக்கு செல்லாமல், எளிதாக தடுப்புக் கட்டைகளை தாண்டி பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக அவ்வப்போது சின்ன சின்ன விபத்துக்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில், தடுப்புக் கட்டைகளை தாண்டி பயணிகளும், பொதுமக்களும் செல்வதை தடுத்து நிறுத்தி முறையாக செல்ல தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரி க்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, மாற்று ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
The post கரூர் பேரூந்து நிலையம் எதிரே சிறிய அளவிலான தடுப்பு கட்டையால் விபத்து அபாயம்: மாற்று ஏற்பாடு மேற்கொள்ள எதிர்பார்ப்பு? appeared first on Dinakaran.