கரூர்: பாப்பயம்பாடி குளம் உடைந்து வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

4 months ago 23

கரூர்: பாப்பயம்பாடி குளம் உடைந்து வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், பாலப்பட்டி தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளநீர் வழிந்தோடுகிறது.

கரூர் மாவட்டத்தில் மாயனூர், கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி, பாலவிடுதி, மைலம்பட்டி, கரூர், குளித்தலை, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நேற்று மழை பெய்தது. இன்று (அக். 13ம் தேதி) காலை 8 மணி வரை பதிவான மழையளவு மி.மீட்டரில்.மாயனூர் 72, கிருஷ்ணராயபுரம் 71, பஞ்சப்பட்டி 58, க.பரமத்தி 49.80, குளித்தலை 44, கரூர் 43, பாலவிடுதி 38, மைலம்பட்டி 29, அணைப்பாளையம் 23, அரவக்குறிச்சி 17, கடவூர் 16.60, தோகைமலை 11.40 என மொத்தம் 473.20 மி.மீட்டரும் சராசரியாக 39.43 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Read Entire Article