கருவேலம்பாடு பஞ். தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை

4 months ago 11

சாத்தான்குளம், ஜன. 4: கருவேலம்பாடு பஞ்சாயத்தில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளை பஞ். தலைவர் நயினார் வழங்கினார். சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாடு பஞ்சாயத்து பதவி காலம் நிறைவடைய உள்ளதையொட்டியும், புத்தாண்டை முன்னிட்டும் பஞ். உறுப்பினர்கள், தூய்மை காவலர்களை கவுரவித்து புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பஞ். தலைவர் நயினார் தலைமை வகித்து தூய்மை காவலர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களை கவுரவித்து புத்தாடைகள் வழங்கினார். இதில் பஞ். செயலர் மந்திரம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கருவேலம்பாடு பஞ். தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை appeared first on Dinakaran.

Read Entire Article