கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

2 hours ago 1

சென்னை: கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.3,151-ஆக நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டுக்கான பருவத்திற்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 9.50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம், 9.85 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,267, 10.10 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3344.20 ஆக நிர்ணயம், 10.65 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்பு டன்னுக்கு ரூ.3,532.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2024-25ம் ஆண்டு பருவத்திற்கு கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ. 3,151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடபட்டுள்ளது. 9.50% அல்லது அதற்கு குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு இந்த விலை நிர்ணயம். 9.85% சர்க்கரைத் திறன் கரும்புக்கு ரூ.3,267 ஆகவும், 10.10% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,344.20 ஆகவும், 10.65% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,532.80 ஆகவும் கொள்முதல் விலை நிர்ணயம்

கரும்பை பொறுத்தவரையில் ஒவ்வொரு பருவத்திற்கும் கொள்முதல் விலையை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்யும். அதனை அடிப்படையாகக் கொண்டு மாநில அரசு விலையை நிர்ணயம் செய்யும். மாநில அரசின் ஊக்கத்தொகையும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் கீழ் 12 சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை ஆலைகளும், 16 தனியார் ஆலைகளும் உள்ளன.

The post கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article