மதுரை: கருத்தடை செய்த பிறகும் பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் தமிழக அரசின் அரசாணையை சுட்டிக்காட்டி ரூ.60,000 இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. குடும்ப நல அலுவலர் முறையாக கருத்தடை செய்யாததே, தன் மனைவி மீண்டும் கருவுற காரணம் என மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் குடும்ப நல மருத்துவ அலுவலர் 2 வாரங்களில் ரூ.60,000 இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The post கருத்தடை செய்த பிறகும் பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் ரூ.60,000 இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.