ஆவடி சிவிஆர்டிஇ நிறுவனத்தில் போர் வாகன சோதனை மையம் திறப்பு

4 hours ago 2

சென்னை: ஆவடியில் போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆர்டிஇ) சார்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள போர் வாகன மற்றும் ஆயுத அமைப்பு சோதனை மையத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி.காமத் திறந்து வைத்தார்.

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆர்டிஇ) சார்பில், ஆவடி அடுத்த வெள்ளனூரில் புதிதாக போர் வாகன மற்றும் ஆயுத அமைப்பு சோதனை (ஏடபிள்யூடிசி) மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் இன்று (மே 17) திறந்து வைத்தார்.

Read Entire Article