கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

4 months ago 23

கரூர்: கருணாநிதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பான புகாரில் சீமான் மீது தாந்தோணிமலை போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த கரூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விக்கிரவாண்டி சட்டப் பேரவை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் ஒன்றைப் பாடினார். இது தொடர்பாக அவர் மீது திருச்சி மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகஸ்ட் 4-ம் தேதி சாட்டை துரைமுருகன் பாடல் குறித்து பேசி, ''அதே பாடலை நானும் பாடுகிறேன். காவல் துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது எனப் பார்க்கிறேன்'' எனக்கூறி அதே பாடலைப் பாடினார். அப்போது அவர் அவதூறான வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.

Read Entire Article