கருங்கல், ஜன.26: கருங்கல் அருகே பாலூர் பகுதியில் கருங்கல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டெம்போக்களை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் எந்தவித அனுமதியும் இன்றி அரசுக்கு சொந்தமான கனிமவளங்கள் கடத்தி வந்தது கண்டிபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெம்போவை ஓட்டி வந்த கப்பியறை பகுதியை சேர்ந்த அஜித் (28), முருங்கவிளை பகுதியை சேர்ந்த ஜெப்ரின் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
The post கருங்கல் அருகே கனிமவளம் கடத்திய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.