கம்பம் பள்ளத்தாக்கில் அறுவடைக்கு தயார் நிலையில் திராட்சை: விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு

2 hours ago 3


கூடலூர்: கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் திராட்சை பயிரிடப்பட்டு தற்போது விளைச்சல் அமோகமாக இருக்கிறது. கடந்த ஒரு மாதங்கள் முன்பு வரை திராட்சை விளைச்சல் குறைந்திருந்த நிலையில் தற்போது பயிரிடப்பட்ட தோட்டங்களில் அறுவடைக்கு தயாராக திராட்சை பழங்கள் உள்ளன. மேலும் கடந்த ஒரு மாதம் முன்பு வரை திராட்சைக்கு உரிய விலை கிடைக்காமல் இருந்தது. ஆனால் தற்போது மகாராஷ்டிரா (நாக்பூர்) மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திராட்சை வரத்து இல்லாமல் இருப்பதால், இங்கு விளைவிக்கப்படும் திராட்சைக்கு நல்ல விலை கிடைக்கும் எனவே வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் விலையும் திராட்சை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. தற்போது தோட்ட விலைக்கு ரூ.40க்கு மேல் திராட்சை வெட்டப்படுகிறது. மேலும் அதிகப்படியான தோட்டங்களில் தற்போது திராட்சை அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், மேலும் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் திராட்சை விவசாயிகள் உள்ளனர்.

The post கம்பம் பள்ளத்தாக்கில் அறுவடைக்கு தயார் நிலையில் திராட்சை: விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article