சென்னை: கபாலீஸவரர் கோயிலில் பங்குனி விழாவை முன்னிட்டு நாளைமுதல் 12-ம் தேதிவரை மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வருடாந்திர பங்குனி பெருவிழா இந்த மாதம் 3-ம் (நாளை) தேதிமுதல் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு விழா நிறைவடையும் வரையில் கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கோயிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.