கனமழை தாக்கம்: வீராணம் ஏரியின் வடிகால் மதகுகளில் தண்ணீர் திறப்பு

5 months ago 19

கடலூர்: வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் ஏரி நிரம்பி வருகிறது. இந்நிலையில், ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரியில் இருந்து வடிகால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளவு 47.50 அடி ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளாக காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதிகளில் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Read Entire Article