கந்தர்வகோட்டை, மே 8: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரையில் இருந்து கந்தர்வகோட்டை வழியாக நேற்று முன்தினம் தஞ்சாவூருக்கு தமிழ்நாடு அரசு பேருந்து தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் புனல்குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, தஞ்சாவூரில் இருந்து எதிரே வந்த லாரி பேருந்து மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது, இதில், பேருந்தில் இருந்த பயணி இருவர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து, தகவலறிந்து வந்த கந்தர்வகோட்டை போலீசார் காயம் பட்ட இருவரையும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post கந்தர்வகோட்டை அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.