திருச்சி பிப்.17: திருச்சி கீழக்குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (32). இவர் கடந்த 14ம் தேதி இரவு பொன்மலை யானை பார்க் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்கள் ராஜ்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பொன்மலைபட்டி மலையடிவாரம் பகுதியைச் சேர்ந்த ரோகித் ஜான் (20), அதே பகுதியை சேர்ந்த வினோத் (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
The post கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.