தொண்டி, மார்ச் 10: தொண்டி அருகே பதனக்குடியில் 7 வயது சிறுவனை காணவில்லை என தேடி வந்த நிலையில், கண்மாயில் பிணமாக மீட்டுள்ளனர். தொண்டி அருகே பதனக்குடி மேலக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மகன் விஷ்ணுவர்த்தன்(7). இவரை கடந்த 7ம் தேதி மாலையில் இருந்து காணவில்லை என தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் வீட்டின் அருகில் உள்ள பதனக்குடி கண்மாயில் விஷ்ணுவர்த்தன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து எஸ்பி.பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post கண்மாயில் சிறுவன் சடலம் மீட்பு appeared first on Dinakaran.