திருவள்ளூர்: தெலுங்கு - கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிருஷ்ணா நதி நீர், மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு புதன்கிழமை இரவு பூண்டி ஏரியை வந்தடைந்தது.
தெலுங்கு- கங்கை திட்டத்தின் கீழ், சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜனவரி முதல் ஏப்ரல் வரை வழங்கவேண்டிய கிருஷ்ணா நதி நீரை வழங்கவேண்டும் எனக்கோரி, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதத்தில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சென்னை குடிநீருக்காக ஆந்திர மாநிலம் - கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு - கங்கை திட்ட கால்வாய் மூலம் கிருஷ்ணா நதி நீரை கடந்த மார்ச் 24-ம் தேதி ஆந்திர நீர்வளத்துறையினர் திறந்தனர்.