கணவர் பிரிந்து சென்றதால் பிரபல சின்னத்திரை நடிகை ஆர்பிக் குடித்து தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

5 hours ago 5


சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்றதால் மனமுடைந்த பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் கழிவறைக்கு சுத்தம் செய்ய பயன்படுத்தும் மருந்தைக் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சென்னை சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா(28). சின்னத்திரை நடிகையான இவர், டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். ஆவடியை சேர்ந்த மென் பொருள் பொறியாளர் சக்தி பிரபு (30) என்பவருக்கும் சின்னத்திரை நடிகை அமுதாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் சக்தி பிரபு பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே அமுதா அடிக்கடி சூட்டிங் தொடர்பாக சென்று இரவு நேரங்களில் காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது கணவர் கண்டித்து, இனி நடிக்க வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அமுதா நான் நடிப்பை விடமாட்டேன் என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சக்தி பிரபு மனைவி அமுதாவைவிட்டு பிரிந்து தனது தாய் வீடான ஆவடிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அமுதா பல முறை தனது கணவரிடம் பேச முயன்றும் அவர் பேச மறுத்ததால், மனம் உடைந்த நிலையில் இருந்த அமுதா நேற்று வீட்டில் கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குடித்த சிறிது நேரத்தில் அவருக்கு தொண்டையில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சத்தில் அமுதா தனது தோழியான கிரண் என்பவருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். உடனே கிரண் விரைந்து வந்து அமுதாவை மீட்டு விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை தகவலின் படி விருகம்பாக்கம் போலீசார் சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கணவர் பிரிந்து சென்றதால் பிரபல சின்னத்திரை நடிகை ஆர்பிக் குடித்து தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article