தர்மபுரி, டிச.4: ஆட்டோ மீது கார் மோதியதில், கட்டிட மேஸ்திரி பலியானார். தர்மபுரி மாவட்டம், சோளக்கொட்டாய் அடுத்த குள்ளிக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் துரை. இவரது மகன் சக்திவேல்(29). இவரது மனைவி நதியா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கட்டி மேஸ்திரியான சக்திவேல், நேற்று முன்தினம் மாலை வாடகை ஆட்டோவில் சொந்த வேலையாக தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார், ஆட்டோ மீது மோதியது. இதில், சக்திவேல் மற்றும் ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரன் படுகாயமடைந்தனர். இருவரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கட்டிட தொழிலாளி பலி appeared first on Dinakaran.