கடுகூரில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றம்

1 day ago 2

சேதமடைந்த குடிநீர் தொட்டி:

அரியலூர் மாவட்டம், கடுகூர் கிராமத்தில் கருப்பண்ணசாமி கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மூலம் அங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த குடிநீர் தொட்டி மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டதால், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், ரூ.9.91 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் சேதமடைந்த குடிநீர் தொட்டி இடிக்கப்படாமல் இருந்தது.

துரித நடவடிக்கை:

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், தூண்களில் விரிசல் விழுந்தும், இரும்பு கம்பிகள் வெளியில் தெரிந்த நிலையிலும் இருந்தது. இதன் அருகே சிறுவர்கள் வழக்கமாக விளையாடி வரும் நிலையில், விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று நேற்று முன்தினம் 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேற்று மதியம் 1 மணியளவில் சேதமடைந்த குடிநீர் தொட்டியை முழுவதுமாக இடித்து அகற்றினர். இதன்காரணமாக விபத்து அபாயம் தடுக்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட `தினத்தந்தி' நாளிதழுக்கும், துரித நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 

Read Entire Article