கடல் மங்கலம் ஊராட்சியில் ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் சிறிய தரைப்பாலம்

4 months ago 14

மதுராந்தகம்: உத்திரமேரூர் ஒன்றியம் கடல் மங்கலம் கிராமத்தில் மழைநீர் செல்ல சிறிய தரைப்பாலம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்து தேங்கி நின்றது. இதனால், அந்த பகுதியில் தோற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர் எம்எல்ஏவிடம் அப்பகுதி மக்கள் தரைப்பாலம் அமைத்து தர வேண்டுமென மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து, உத்திரமேரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதா சேகருக்கு பரிந்துரை செய்தார். மேலும், ஒன்றிய குழு பெருந்தலைவர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.5 லட்சம் ஒதுக்கீடு செய்து சிறிய தரைப்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தரைப்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று காலை முன்தினம் நடந்தது. இதில் திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் சசிகுமார், மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ், மாயகிருஷ்ணன், குமார் தேவ், மருத்துவன் பாடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கடல் மங்கலம் முன்னாள் ஊராட்சித் தலைவர் வீராசாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆதிநாராயணன் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கடல் மங்கலம் ஊராட்சியில் ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் சிறிய தரைப்பாலம் appeared first on Dinakaran.

Read Entire Article