தொண்டி, நவ.21: தொண்டி கடல் பகுதியில் கடந்த 17ம் தேதி நள்ளிரவு மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கடல் நீர்மட்டம் உயர்ந்து தரைப்பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரம் வந்தது. இதுகுறித்து செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று மீன்வளத் துறை இணை இயக்குனர் கோபிநாத், ஆய்வாளர் அபுதாஹிர் உள்ளிட்ட அதிகாரிகள் பனைக்குளம் ஆற்றங்கரை முதல் தொண்டி மற்றும் எஸ்.பி.பட்டினம் வரையிலும் கடல் பகுதிகளில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post கடல் நீர்மட்டம் உயர்வு அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.