கடலூர் ரயில் விபத்து விசாரணை: கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்பட 13 பேர் ஆஜராக நோட்டீஸ்

4 hours ago 2

கடலூர்: கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், திருச்சி ரயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதில் ஒரு மாணவி உட்பட 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த விசாரணைக் குழு விசாரணையில் ஈடுபட்டனர்.

Read Entire Article