திருப்புவனம்: காவல் நிலைய மரணங்களை மூடி மறைக்க திமுகவினர் பேரம் பேசுகின்றனர் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தனிப்படை போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது தாயார் அன்னம்மாளுடன் வந்து சந்தித்து ஆறுதல் கூறினார். ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.