மடப்புரம் கோயில் காவலாளி மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா, எந்த குற்ற உணர்வும் இன்றி திண்டுக்கல் அரசு கல்லூரிக்கு வந்து செல்வதை தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார், தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது மரணமடைந்தார். இவர் மீது புகார் கொடுத்த நிகிதா, திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறைத் தலைவராக பணிபுரிந்து வருபவர்.