கடலூரில் பரவலாக மழை: சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

2 months ago 7

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மழை பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. படகுகளை கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இது, நாளை (நவ.27) புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது தமிழகம் நோக்கி நகரும் என்றும், இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கடலூர் மாவட்டத்திற்கு இன்று (நவ.26) செவ்வாய்க்கிழமை ஆரஞ்சு ஆலர்ட்டும், நாளை (27) புதன்கிழமை ரெட் அலர்ட்-டும் விடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article