கடலூரில் தொழிற்சங்கத்தினர் 15 இடங்களில் மறியல் போராட்டம்; 1500 பேர் கைது

2 hours ago 2

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் 15 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதில் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அனைத்து பேருந்துகளும் இயங்கின. கடைகள் அடைக்கப்படவில்லை.

மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோருதல், நான்கு தொழிலாளர் நல சட்ட தொகுப்புகளை ரத்து செய்யக் கோருதல் உள்ளிட்ட18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று (ஜூலை.9) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டு இருந்தன. அதன்படி இன்று (ஜூலை.9) கடலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.

Read Entire Article