சென்னை: சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமங்கலம் 7-வது சாலையில் மருத்துவர் பாலமுருகன், அவரது மனைவி வழக்கறிஞர் சுமதி தம்பதி, மற்றும் 2 பிள்ளைகள் ஜெஷ்வந்த்குமார், லிங்கேஸ்வரன் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர் பாலமுருகன் 5 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பிரச்சனையில் சிக்கி இருந்த நிலையில் மீள முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
The post கடன் தொல்லையால் விபரீதம்.. சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர், வழக்கறிஞர் உட்பட 4 பேர் தற்கொலை..!! appeared first on Dinakaran.