மதுரை: தொழில் கடனை முழுமையாகச் செலுத்திய பிறகும், அடமான சொத்து ஆவணங்களைத் திரும்ப வழங்காத வங்கியின் தலைமை மேலாளரை நேரில் அழைத்துக் கண்டித்து, அபராதம் விதித்ததுடன், ஏழை மக்களை வங்கிகள் துன்புறுத்தக் கூடாது என்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி சேர்ந்த மாரித்துரை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் தொழில் செய்வதற்காகக் கரூர் வைசியா வங்கியில் ரூ.39 லட்சத்து 74 ஆயிரத்து 523 கடன் பெற்றேன். கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையை முறையாகச் செலுத்தி வந்தேன். கரோனாவால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடனை முறையாகச் செலுத்த முடியாமல் போனது.