புதுக்கோட்டை: தமிழகத்திற்கு அறிவுரை கூறும் அண்ணாமலை, உ.பி., மகாராஷ்டிராவிற்கு கூற வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் கூறியதாவது; “உ.பி.,யில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் புகாரளிக்கவே பயப்படுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியைபோல இல்லாமல் திமுக ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையால்தான் பெண்கள் தைரியமாக புகார் தருகின்றனர். மாணவிகள் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
யாரோ தூண்டுதலின் பேரில் மாணவர்கள் உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அரசின் மீதுள்ள நம்பிக்கையை ஈபிஎஸ், அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில், குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டுள்ளது. குற்றங்கள் நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவாளிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோமா என்பது தான் முக்கியம். அதனை இந்த அரசு துரிதமாக எடுத்து இருக்கிறது. பெண்களுக்கு திமுக அரசு பாதுகாப்பை தருகிறது. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது.” இவ்வாறு தெரிவித்தார்.
The post கடந்த அதிமுக ஆட்சியைபோல இல்லாமல் திமுக ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையால்தான் பெண்கள் தைரியமாக புகாரளிக்கின்றனர்: அமைச்சர் ரகுபதி!! appeared first on Dinakaran.