கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

4 hours ago 1

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த பரமசிவன் மகன் கண்ணன் (வயது 23), சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலெட்சுமி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Read Entire Article