கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி 3 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

2 months ago 11

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 3 பேரை, சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடைசெய்ய மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியை சேர்ந்த வசந்த் (எ) வசா (28), காமராஜர் நகரை சேர்ந்த அருண்பாண்டியன் (எ) அலர்ட் அருண் (28), சிகாமணி (எ) சிகா (30) ஆகிய 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்த சிவகாஞ்சி போலீசார், அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி 3 பேர் கைது: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article