ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே பாப்பாங்குழி கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், நேற்று சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, பாப்பாங்குழி கிராமம் மாரியம்மன் கோயில் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபர்கள், போலீசார் வருவதை கண்டு சிதறி ஓடினர். தப்பியோடிய 2 பேரில், 3 பேரை மடக்கி பிடித்த போலீசார், அவர்களிடம் சோதனை நடத்தியதில், கையில் வைத்திருந்த கோணி பையில் 4.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே கிராமத்தை சேர்ந்த வேலு (23), மகேஷ் (26) ரங்கநாதன் (27) உள்ளிட்ட 3 பேரை, கைது செய்து போலீசார், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.