சென்னை: கச்சத்தீவை பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார். இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி கொண்டுவரப்படுகிறது. கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி நாளை தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். இலங்கை படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும்.
இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மீனவர் பிரச்சனை குறித்து அந்நாட்டு அரசுடன் பேச முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மீனவர்கள், படகுகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post கச்சத்தீவை பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.