கச்சத்தீவு அருகே வலைகளை அறுத்து தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்

4 months ago 25

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மேலும், அவர்களது வலைகளை அறுத்தனர்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் 12 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்று, கடந்த சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

Read Entire Article