ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 13ம் தேதிக்கு மாற்றம்

2 months ago 7

அரியலூர், டிச. 3: அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட அளவில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் 6.12.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் எதிர் வரும் 13.12.2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஓய்வூதியர் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 13ம் தேதிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article