சென்னை: தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட ஆய்வுக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைச் செயலக பணியாளர்கள் கறுப்பு பட்டை அணிந்து நேற்று பணியாற்றினர்.
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கிடையில், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.