ஓடையில் சீராக ஓடும் தண்ணீர் சாராயம் காய்ச்சிய பெண் உள்பட இருவர் கைது

5 months ago 14

 

கோபி, நவ.26: தாளவாடி மரியபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனைக்காக கொண்டு சென்ற பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மரியபுரத்தில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக கோபி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மது விலக்கு போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மரியபுரத்தில் மறைவான பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சவேரி வின்சென்ட் மனைவி ரத்தினமேரி (39), அதே பகுதியை சேர்ந்த தனுஷ்லாஸ் மகன் கோவிந்தராஜ்(43) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரத்தினமேரியும், கோவிந்தராஜனும் கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post ஓடையில் சீராக ஓடும் தண்ணீர் சாராயம் காய்ச்சிய பெண் உள்பட இருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article