ஓசூர் அருகே பதுக்கி வைத்திருந்த ரூ.17 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

4 months ago 27

ஓசூர்: தீபாவளி பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் விதி மீறி பட்டாசுகளை இருப்பு வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இதன்பேரில், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், ஓசூர் சிப்காட் அருகே கோவிந்த அக்ரஹாரம் எஸ்எஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ஏஎஸ்பி அக்ஷய் அனில் வாக்கரே தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், தனியாருக்கு சொந்தமான குடோனில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் (39) என்பவர் அனுமதியின்றி ரூ.17.2 லட்சம் மதிப்பிலான 7830 பட்டாசு பெட்டிகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பட்டாசு பெட்டிகளை கைப்பற்றி பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

 

The post ஓசூர் அருகே பதுக்கி வைத்திருந்த ரூ.17 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article