ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக அதிரடி உயர்வு

1 week ago 5

தொடர்ந்து உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை, கடந்த ஓரிரு நாட்களாக சரிவை சந்தித்து வந்தது. நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.66,280க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,290-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,410-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.104-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article